Sunday, August 10, 2008

ஏ 32 வீதி திறக்கப்படவுள்ளது- அமைச்சர் கெஹலியரம்புக்வெல

நாட்டின் எல்லா பாகங்களிலும் இருந்து மக்கள் வடக்கிற்கு செல்லுவதற்கான மாற்று தரை வழி போக்குவரத்து பாதையினை திறந்து வைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்க பேச்சாளரும் அமைச்சருமான கெஹலியரம்புக்வெல தெரிவித்தார்.
வெளிநாட்டு செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூநகரி,கிளிநொச்சி மாவட்டங்கள் வெகுவிரைவில் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும், அதன் பின்பு நாட்டின் எல்லா பாகங்களிலும் இருந்து மக்கள் வடக்கிற்கு செல்லுவதற்கான மாற்று போக்குவரத்து பாதையான ஏ 32 வீதி திறக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும்தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் சமாதானத்திற்கு இணங்காததால் கொழும்பிற்கான தரை வழி போக்குவரத்து பாதையாக ஏ9 வீதி மூடப்பட்டது.
இதேவேளை விடுதலைப்புலிகளின் மிகப்பெரிய கடற்தளம் வட மேற்கு கரையோரத்தில் உள்ள விடத்தல்தீவில் அமைந்துள்ளது. இது தற்போது எமது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் இதனூடாக பூநகரிக்கான மாற்று போக்குவரத்து பாதையான ஏ 32 வீதி திறக்கப்படுவதற்றகான வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும்தெரிவித்தார்.

No comments: