
முல்லைத்தீவுக் காட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பிரபாகரனுக்கு ஒக்சிஜன் மற்றும் சேலைன் கொடுக்க ரணில் விக்கிரமசிங்கவும் லால்காந்தவும் முயற்சிப்பதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். பிரபா- ரணில் - லால் ஆகிய இந்த திரித்துவத்தின் தேவை இந்த அரசாங்கத்தை கவிழ்ப்பதாகும். இதற்காக அவர்கள் கடந்த ஜூலை 10 ஆம் திகதி பணிப்புறக்கணிப்பொன்றை மேற்கொண்ட போதும் அது தோல்வியடைந்ததால் பிரபாகரனுக்கு கிடைக்க வேண்டிய வெற்றி இல்லாமல் போனதுடன் படையினரின் தோல்வி தவிர்க்கப்பட்டது. உழைக்கும் முற்போக்கு மக்கள் இந்த சூழ்ச்சியை தோற்கடித்தனர். அத்துடன் மீண்டும் பணிப்புறக்கணிப்பொன்றை மேற்கொண்டு புலிகளுக்கு சேலைன் கொடுத்து காட்டிக் கொடுக்கும் முயற்சியை மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார். முற்போக்கு சக்திகள் ஜனாதிபதியை சூழ்ந்து கொண்டுள்ளதால் முல்லைத்தீவுக் காட்டில் இறுதி மூச்சினை இழுத்துக் கொண்டிருக்கும் பிரபாகரன் நிரந்தர தூக்கத்தை அடைவார் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment