Monday, August 11, 2008

படையினர் புலிகள் கிளாலியில் மோதல்

யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று அதிகாலை மோதல் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு பகுதியை நோக்கி படையினர் திடீர் தாக்குதலை நடத்தியதையடுத்து புலிகளும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த மோதலில் 15 புலிகள் பலியாகியுள்ளதாகவும் தாக்குதலையடுத்து இடம்பெற்ற தேடுக்à நடவடிக்கையில் இரு பெண் புலிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார் இது குறித்து அவர் மேலும் கூறியதாவது தாக்குதலை அடுத்து படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நேற்று அதிகாலை 4 மணி>யளவில் கிளாலி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளது பாதுகாப்பு முன்னரங்கு நிலையின் மீது படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர். இராணுவத்தின் 53ஆம் இலக்கப் படையணியினரே இத்தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலின் போது 15 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக புலிகளின் தகவல் பரிமாற்றத்தின் மூலம் தெரியவந்துள்ளது. குறித்த தாக்குதலை அடுத்து படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கை ஒன்றின் போது இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் உட்பட ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. படையினர் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து அப்பகுதியில் நிலைகொண்டுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் பதில் தாக்குதலை நடத்தியபோதிலும் அதனால் படையினருக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படவில்லை. புலி உறுப்பினர்களின் தாக்குதலை அடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையில் சுமார் இரண்டு மணிநேரங்கள் வரையில் மோதல்கள் இடம்பெற்றன. இம்மோதல்களின் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது படையினரால் மோட்டார் மற்றும் ஷெல் தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இரு தரப்பு மோதலை அடுத்து அப்பகுதிகளில் படையினரால் தொடர்ந்தும் சோதனை மற்றும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments: