Wednesday, August 13, 2008

தமிழ் மக்களின் அவலங்களுக்கு புலிகளே பொறுப்பு- ராசப்பு ஜோசப்பு!

கடந்த 25 வருட கால வரலாற்றில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகளுக்கு புலிகளே பொறுப்புக் கூற வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான சன்டே ஒப்சேவர் ஆங்கில வாராந்த இதளுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே ஆயர் இவ்வாறு கூறியுள்ளார்.அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்லர். அவ்வாறு கூறி வருவது புலிகளின் சொந்தக் கருத்தாகும். புலிகளுக்கு ஆதரவாக நான் எந்த கருத்தையும் ஒருபோதும் வெளியிடவில்லை. அப்பாவித் தமிழ் மக்கள், புலிகள் மீதும் பிரபாகரன் மீதும் அதிருப்தயடைந்துள்ளனர். அவர்களைப் போன்றே நானும் புலிகளின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தியுடனேயே இருக்கிறேன் என்றும் ஆயர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: