Monday, August 11, 2008

கிளாலியில் கொல்லப்பட்ட இரண்டு இளம்பெண் புலிகளின் சடலங்கள், யாழ்ப்பாண வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் கிளாலியில் நேற்றுக்காலை ராணுவக் கொடாண்டோ படையினர் நடாத்திய அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு பெண்புலிகளினதும் சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளன.நேற்றையதினம் அதிகாலை கிளாலி முன்னரங்க பகுயில் முன்னேறிய படையினர் புலிகளின் பதுங்கு குழிகளை நிர்மூலமாக்கியிருந்தனர். இத்தாக்குதலில் 15 புலிகள் கொல்லப்பட்டதுடன் இருவரினது சடலங்களையும் பெருமளவு ஆயுதங்களையும் தாம் கைப்பற்றியிருந்ததாக ராணுவத்தினர் தெரிவித்திருந்தனர். இதன்தொடர்ச்சியாக படையினரால் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இரு பெண்புலிகளின் சடலங்களையும் அடையாளம் காண்பதற்காக, யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு, சாவகச்சேரி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.இந்தநிலையில் குறித்த பெண்புலிகளின் சடலங்கள் இரண்டும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பதற்காக 5 நாட்களுக்கு வைக்கப்படவுள்ளன. இளம் வயதுள்ள இருபெண் புலிகளில் ஒருவரது சடலம் புலிகளின் சீருடையுடனும், மற்றவரின் சடலம் சாதாரண உடையிலும் காணப்படுவதாக யாழ் பொதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: