
எம் இனிய மக்களுக்கும்இதயவீணை வானொலியின் அமைப்பாளர்கள்மற்றும் கலைஞர்களுக்கும்புலம் பெயர்ந்து வாழும்எம் தாயக தேசத்து உறவுகளுக்கும் வணக்கம்!
எமது மக்களின் உரிமைக்குரலாகவும், எமது தேசத்தின் உண்மையாகவும், மக்களின் மனச்சாட்சியாகவும் ஒலித்து வருகின்ற இதயவீணை வானொலி நான்கு அகவைகளை கடந்து விட்ட சரித்திர சாதனையோடு இன்று ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கின்றது.
இந்த சரித்திர நிகழ்வானது மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் இந்த சாதனை மகிழ்ச்சியைதுயரங்கள் நிறைந்த இந்த சூழலில் கொண்டாடி மகிழ்வதற்கு எமது மனங்கள் மறுக்கின்றன.
கடந்து போன ஆண்டுகளிலிலும் ஒவ்வொரு அகவைகளையும் இதயவீணை வானொலி கொண்டாடி மகிழ்ந்திருந்த போது எனது வாழ்த்துக்களையும் உற்சாக வரவேற்பையும் நான் தெரிவித்திருந்தேன்.
இந்த வானொலி ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கும் இன்றைய சூழலிலும்எமது மக்கள் துயரங்களையும், அவலங்களையும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனாலும் துயரங்களில் இருந்து விடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை ஒளி தெரிகின்றது.
இருண்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை பரந்த வெளிச்சத்தை நோக்கி அழைத்து செல்வதே இந்த வானொலியின் இலக்காக இருந்து வருவதால்இன்றைய நாளில் சில கருத்துக்களை நான் உங்களிடம் மனம் திறந்து சொல்ல விரும்புகின்றேன்.
எமது மக்களின் எதிர்கால விடிவிற்கு ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. இருண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்விடங்களில் நம்பிக்கை தரும் வெளிச்சங்களை கொண்டு வருவதற்கு ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
அவலப்படுகின்ற எமது மக்களின் வாழ்வில் மேலும் சுமைகளை சுமத்தும் வன்முறைகளுக்குதூபமிடும் சக்திகளுக்கு துணை போகாமல், எமது மக்களின் சுமைகளை இறக்கி வைப்பதற்கே ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
எமது மக்களுக்கு வழிகாட்டிகளாக நின்று ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை நோக்கி ஊடகங்கள் வழி நடத்தி செல்ல வேண்டும். உண்மையின் பக்கம் நின்று குரல் எழுப்ப வேண்டும்.
அந்த வகையில் இதயவீணை வானொலி என்பது மக்களின் பக்கம் நின்று, உண்மையின் பக்கம் நின்று எமது மக்களை எதிர்கால விடியலை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடியது. அதன் பாதைகளில் சமாதானத்தின் எதிரிகள் தடைகளை உருவாக்கி விட்டு காத்திருப்பார்கள்.
மக்களின் நண்பர்களை, சமாதானத்தை நேசிப்பவர்களை, அமைதியை விரும்புபவர்களை, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக உழைப்பவர்களை, மக்களின் அன்றாட அவலங்களுக்கு தீர்வு காண்பவர்களை, ஐனநாயக சத்திகளை, மனித உரிமைவாதிகளை, உண்மையை உள்ளபடி உரைக்கும் கல்விமான்களை, ஊடகவியலாளர்களை கொன்று வெறி தீர்ப்பதே சமாதானத்தின் எதிரிகளின் கொடிய வன்முறையாக இருந்து வருகின்றது. இவைகளே அவர்கள் போடுகின்ற தடைகளாக இருந்து வருகின்றன.
கொல்வதும், கொல்லக்கொடுப்பதும், அதற்கான சூழ்நிலைகளை தோற்றுவிப்பதுமே எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வியல் உரிமைக்கு தடையாக இருப்பவர்களின் நோக்கமாக இருந்து வருகின்றது. இவைகள் யாவும் விடுதலையின் பெயரால் எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு படுகுழி தோண்டும் கொடிய நிகழ்வுகளாகவே நீடித்து வருகின்றன.
இந்த உண்மைகளை உறுதியுடன் நின்று உரைப்பதற்கு பல்வேறு ஊடகங்களும் தயக்கம் காட்டி வருகின்றன.
உண்மையை உரைக்கும் குரல்வளைகளுக்கு நேரே துப்பாக்கிக்குழாய்கள் நீட்டப்பட்டாலும்,உண்மையை உரைப்பவர்களை கொன்று வெறி தீர்த்து தெருவோரங்களில் வீசி எறிந்தாலும்,அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல், வன்முறைகளுக்கு துதி பாடாமல் இதயவீணை வானொலிகடந்த நான்கு ஆண்டுகளாக சவால்களை எதிர் கொண்டு எமது மக்களுக்கான தனது பங்களிப்பை செலுத்தி வந்திருக்கின்றது.
உண்மையை மறுப்பவர்கள் ஒன்று திரண்டு எதிரில் நின்றாலும் எமது மக்களின் பக்கம் நின்றுஇதயவீணை உண்மையை உறுதியுடன் உரைத்து வருகின்றது. தனக்கே உரியை வழிமுறையில் தனது சூழ்நிலைக்குள் நின்று எமது மக்களுக்கான இந்த மாபெரும் தியாகத்தை புரிந்து வருகின்றது.
அதே வேளையில் எமது மக்களுக்கு வழிகாட்டியாக நின்று நடைமுறைச்சாத்தியமான வழிமுறையிலான ஒரு அரசியல் பாதையை இதயவீணை காட்டியிருக்கிறது.
எமது அரசியல் இலக்கை அடைவதற்கு எங்கிருந்து தொடங்க முடியுமோ அங்கிருந்துதான் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையோடு, அந்த அரசியல் இலக்கின் ஆரம்பப்படி வரை பல்வேறு சக்திகளையும் அழைத்து வருவதற்கு இயதவீணை பெரும் பங்காற்றியிருக்கின்றது.
அடையமுடியாத இலக்கிற்காகவும், ஆயுதவன்முறைக்காகவும் எமது மக்கள் சமாதானத்தின் எதிரிகளின் பாலாத்காரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.
இருண்ட சிறையில் வாடும் எமது மக்களை முழுமையாக மீட்டெடுத்து சமாதான தேசத்தை நோக்கி, அமைதியை நோக்கி, அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கி வழி நடத்தி செல்லும் ஐனநாயக சக்திகளுக்கு பக்கபலமாக நின்று தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்பதே இதயவீணையின் வரலாற்று கடமையாகும்.
அச்சமற்ற வாழ்வு, அமைதியான சூழல், அரசியலுரிமை சுதந்திரம் இவைகளுக்காக உழைக்க வேண்டும்.
அர்ப்பண உணர்வோடு எமது தயாக தேசத்தின் இதயவீணையாக உறுதி கொண்டு உழைக்கும் உண்மையின் குரல்களை நான் மனம் திறந்து பாராட்டுகின்றேன்.
எமது மக்களின் உரிமைக்குரலாகவும், எமது தேசத்தின் உண்மையாகவும், மக்களின் மனச்சாட்சியாகவும் ஒலித்து வருகின்ற இதயவீணை வானொலி நான்கு அகவைகளை கடந்து விட்ட சரித்திர சாதனையோடு இன்று ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கின்றது.
இந்த சரித்திர நிகழ்வானது மகிழ்ச்சிக்குரியதாக இருப்பினும் இந்த சாதனை மகிழ்ச்சியைதுயரங்கள் நிறைந்த இந்த சூழலில் கொண்டாடி மகிழ்வதற்கு எமது மனங்கள் மறுக்கின்றன.
கடந்து போன ஆண்டுகளிலிலும் ஒவ்வொரு அகவைகளையும் இதயவீணை வானொலி கொண்டாடி மகிழ்ந்திருந்த போது எனது வாழ்த்துக்களையும் உற்சாக வரவேற்பையும் நான் தெரிவித்திருந்தேன்.
இந்த வானொலி ஐந்தாவது அகவையில் கால் எடுத்து வைக்கும் இன்றைய சூழலிலும்எமது மக்கள் துயரங்களையும், அவலங்களையும் சுமந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.ஆனாலும் துயரங்களில் இருந்து விடுபடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை ஒளி தெரிகின்றது.
இருண்ட சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களை பரந்த வெளிச்சத்தை நோக்கி அழைத்து செல்வதே இந்த வானொலியின் இலக்காக இருந்து வருவதால்இன்றைய நாளில் சில கருத்துக்களை நான் உங்களிடம் மனம் திறந்து சொல்ல விரும்புகின்றேன்.
எமது மக்களின் எதிர்கால விடிவிற்கு ஊடகங்களின் பங்களிப்பு அவசியமானது. இருண்டு கிடக்கும் எமது மக்களின் வாழ்விடங்களில் நம்பிக்கை தரும் வெளிச்சங்களை கொண்டு வருவதற்கு ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
அவலப்படுகின்ற எமது மக்களின் வாழ்வில் மேலும் சுமைகளை சுமத்தும் வன்முறைகளுக்குதூபமிடும் சக்திகளுக்கு துணை போகாமல், எமது மக்களின் சுமைகளை இறக்கி வைப்பதற்கே ஊடகங்கள் உழைக்க வேண்டும்.
எமது மக்களுக்கு வழிகாட்டிகளாக நின்று ஒளிமயமான ஒரு எதிர்காலத்தை நோக்கி ஊடகங்கள் வழி நடத்தி செல்ல வேண்டும். உண்மையின் பக்கம் நின்று குரல் எழுப்ப வேண்டும்.
அந்த வகையில் இதயவீணை வானொலி என்பது மக்களின் பக்கம் நின்று, உண்மையின் பக்கம் நின்று எமது மக்களை எதிர்கால விடியலை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது.
சமாதானத்திற்கான பயணம் என்பது நீண்ட நெடியது. அதன் பாதைகளில் சமாதானத்தின் எதிரிகள் தடைகளை உருவாக்கி விட்டு காத்திருப்பார்கள்.
மக்களின் நண்பர்களை, சமாதானத்தை நேசிப்பவர்களை, அமைதியை விரும்புபவர்களை, அரசியலுரிமை சுதந்திரத்திற்காக உழைப்பவர்களை, மக்களின் அன்றாட அவலங்களுக்கு தீர்வு காண்பவர்களை, ஐனநாயக சத்திகளை, மனித உரிமைவாதிகளை, உண்மையை உள்ளபடி உரைக்கும் கல்விமான்களை, ஊடகவியலாளர்களை கொன்று வெறி தீர்ப்பதே சமாதானத்தின் எதிரிகளின் கொடிய வன்முறையாக இருந்து வருகின்றது. இவைகளே அவர்கள் போடுகின்ற தடைகளாக இருந்து வருகின்றன.
கொல்வதும், கொல்லக்கொடுப்பதும், அதற்கான சூழ்நிலைகளை தோற்றுவிப்பதுமே எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்வியல் உரிமைக்கு தடையாக இருப்பவர்களின் நோக்கமாக இருந்து வருகின்றது. இவைகள் யாவும் விடுதலையின் பெயரால் எமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு படுகுழி தோண்டும் கொடிய நிகழ்வுகளாகவே நீடித்து வருகின்றன.
இந்த உண்மைகளை உறுதியுடன் நின்று உரைப்பதற்கு பல்வேறு ஊடகங்களும் தயக்கம் காட்டி வருகின்றன.
உண்மையை உரைக்கும் குரல்வளைகளுக்கு நேரே துப்பாக்கிக்குழாய்கள் நீட்டப்பட்டாலும்,உண்மையை உரைப்பவர்களை கொன்று வெறி தீர்த்து தெருவோரங்களில் வீசி எறிந்தாலும்,அச்சுறுத்தலுக்கு அடி பணியாமல், வன்முறைகளுக்கு துதி பாடாமல் இதயவீணை வானொலிகடந்த நான்கு ஆண்டுகளாக சவால்களை எதிர் கொண்டு எமது மக்களுக்கான தனது பங்களிப்பை செலுத்தி வந்திருக்கின்றது.
உண்மையை மறுப்பவர்கள் ஒன்று திரண்டு எதிரில் நின்றாலும் எமது மக்களின் பக்கம் நின்றுஇதயவீணை உண்மையை உறுதியுடன் உரைத்து வருகின்றது. தனக்கே உரியை வழிமுறையில் தனது சூழ்நிலைக்குள் நின்று எமது மக்களுக்கான இந்த மாபெரும் தியாகத்தை புரிந்து வருகின்றது.
அதே வேளையில் எமது மக்களுக்கு வழிகாட்டியாக நின்று நடைமுறைச்சாத்தியமான வழிமுறையிலான ஒரு அரசியல் பாதையை இதயவீணை காட்டியிருக்கிறது.
எமது அரசியல் இலக்கை அடைவதற்கு எங்கிருந்து தொடங்க முடியுமோ அங்கிருந்துதான் தொடங்க முடியும் என்ற நம்பிக்கையோடு, அந்த அரசியல் இலக்கின் ஆரம்பப்படி வரை பல்வேறு சக்திகளையும் அழைத்து வருவதற்கு இயதவீணை பெரும் பங்காற்றியிருக்கின்றது.
அடையமுடியாத இலக்கிற்காகவும், ஆயுதவன்முறைக்காகவும் எமது மக்கள் சமாதானத்தின் எதிரிகளின் பாலாத்காரப்பிடிக்குள் சிக்குண்டு தவிக்கின்றார்கள்.
இருண்ட சிறையில் வாடும் எமது மக்களை முழுமையாக மீட்டெடுத்து சமாதான தேசத்தை நோக்கி, அமைதியை நோக்கி, அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கி வழி நடத்தி செல்லும் ஐனநாயக சக்திகளுக்கு பக்கபலமாக நின்று தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்பதே இதயவீணையின் வரலாற்று கடமையாகும்.
அச்சமற்ற வாழ்வு, அமைதியான சூழல், அரசியலுரிமை சுதந்திரம் இவைகளுக்காக உழைக்க வேண்டும்.
அர்ப்பண உணர்வோடு எமது தயாக தேசத்தின் இதயவீணையாக உறுதி கொண்டு உழைக்கும் உண்மையின் குரல்களை நான் மனம் திறந்து பாராட்டுகின்றேன்.
No comments:
Post a Comment