Wednesday, October 1, 2008

வவுனியா தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் தனியார் கல்வி நிறுவனகா.பொ.த உயர்தர மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

வவுனியா தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் தனியார் கல்வி நிறுவன கா.பொ.த உயர்தரம் மாணவனாம். அடையாள அட்டையொன்றின் மூலம் கண்டு பிடிப்பு வவுனியா நகரப்பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலை க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி கற்ற இளைஞன் ஒருவரே நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா தனியார் பஸ் நிலையச் சந்தியில் பொலிசார் ஏறியிருந்த முச்சக்கர வண்டிமீது, சைக்கிளில் வந்த இளைஞன் ஒருவர் மோதி தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக இந்தச் சம்பவம் பற்றி தகவல் வெளியிட்டிருந்த பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது. சம்பவ இடத்தில் சிதைந்த நிலையில் எடுக்கப்பட்ட தற்கொலைக் கொலையாளியின் உடைமையில் இருந்து எடுக்கப்பட்ட அடையாள அட்டையின் மூலம், அவர் வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்பில் கல்வி கற்று வந்தவர் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என்பதும், பொதுமக்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர் என்பதும் குறி்ப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன

No comments: