
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியா ஒருபோதும் உதவி வழங்காது என ஜப்பான் சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சென்ற உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு எனவும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய அமைப்பு எனவும் சுட்டிக்காட்டியிருக்கும் அந்த அதிகாரி, அவ்வாறானதொரு அமைப்புக்கு ஒருபோதும் இந்தியா உதவிசெய்யாது எனத் தெரிவித்துள்ளார்.
வன்னிக்கு உணவு
வன்னியில் நடைபெறும் மோதல்களால் இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவுப் பொருள்களை அனுப்ப இந்தியா நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக ஏற்கனவே ஒருதொகுதி உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுசெல்லப்பட்ட உணவுப் பொருள் தொகுதிகள் வன்னிப் பகுதியைச் சென்றடைந்திருப்பதுடன், அந்த உணவுப் பொருள்கள் மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்ய இந்தியா முயற்சிப்பதாக அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தற்பொழுது இலங்;கையில் நிலவும் சூழ்நிலையில் மனிதநேயப் பிரச்சினைகள் காணப்படுவதாகவே இந்தியா பார்க்கிறது எனவும், நீண்டகாலமாக இலங்கையில் தொடரும் முரண்பாடுகள் அரசியல் தீPர்வொன்றின் மூலமே தீர்த்துவைக்கப்பட வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு எனவும் சிவ்சங்கர் மேனன் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment