Saturday, October 25, 2008

ராமேஸ்வரம் கோர்ட்டில் சீமான், அமீர் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்


இயக்குநர் சீமான் மற்றும் அமீர் இன்று ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ராமேஸ்வரம் போராட்டத்தின்போது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக கூறி இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இருவரும் நேற்று இரவு கியூ பிரிவு தலைமையகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இன்று இருவரையும் விமானம் அல்லது கார் மூலம் ராமேஸ்வரம் கொண்டு செல்ல போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருவரையும் ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கவுள்ளனர்.

No comments: