Friday, October 24, 2008

தடையை நீக்குமாறு விடுதலைப் புலிகள் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்


தமது அமைப்பு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தம்மை எதிரிகளாகப் பார்க்க வேண்டாம் எனவும், பழையவற்றை மறந்து தமது போராட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்குமாறும் விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியாவினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுவரும் இராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெகுவரைவில் இலங்கை இராணுவத்தின் மீது வலிந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். இழக்கப்பட்ட நிலப்பரப்புக்கள் வெகுவிரைவில் மீட்கப்படும் எனவும் பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்துள்ள விசேட செவ்வியில் நடேசன் தெரிவித்துள்ளார்.

No comments: