Sunday, October 26, 2008

தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி போராட்டங்கள் நடத்த ஏற்பாடு


ஈழத் தமிழருக்கு ஆதரவாக தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களுக்கு எதிர் போராட்டங்களையும் பேரணிகளையும் கொழும்பிலும் புறநகர் பகுதிகளிலும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஜே.வி.பிமற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள கிராமங்களில் வீடுவீடாக சென்று விளக்கமளித்து வரும் ஜே.வி.பி உறுப்பினர்கள் தமிழகத்தில் இடம்பெறும் போராட்டங்களினால் ஸ்ரீலங்காவின் இறைமைக்கு ஆபத்து என்று கூறிவருவதுடன் அதற்கு எதிராக சிங்கள மக்கள எழுச்சியடைய வேண்டும் எனவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அரசியல் கட்சிவேறுபாடுகள் இன்றி சகலரும் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதற்கு தயாராக வேண்டும் எனவும் இல்லையேல் புலிகள் தமிழீழத்தை பெற்றுவிடுவார்கள் என்றும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.
புத்த பிக்குமாரை கொண்ட ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர்கள் பொளத்த ஆலயங்களில் பிரசாரங்களை மேற்கொண்ட வருகின்றனர்.புலிகளுக்கு எதிராக ஸ்ரீலங்கா படையினர் பெற்று வரும் வெற்றிகளை இல்லாமல் செய்வதற்கே தமிழ் நாட்டில் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாகவும் ஜாதிக ஹெல உறுமய பிக்குமார் தெரிவிக்கின்றனர்.

No comments: