Monday, October 20, 2008

பராக் ஒபாமாவுக்கு முன்னாள் இராஜாங்கச் செயலாளர் பவல் ஆதரவு


அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய செனெட்டரென பராக் ஒபாமாவை கொலின் பவல் வருணித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் மற்றும் பராக் ஒபாமா ஆகிய இருவருக்கும் நாட்டை ஆட்சி செய்கின்ற தகுதியிருந்தபோதிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சிறந்த முறையில் கையாளக்கூடிய திறமை பராக் ஒபாமாவுக்கே அதிகமாக உள்ளதெனவும் கொலின் பவல் குறிப்பிட்டார்.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் ஆக்கபூர்வமானதாக இல்லையெனக் கூறி தனது கட்சியை கொலின் பவல் விமர்சித்துள்ளார்.

எனினும், ஜோன் மக்கெய்னால் தெரிவுசெய்யப்பட்ட குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலின் இன்னமும் ஜனாதிபதிப் பதவிக்குத் தயாராகவில்லை என்பது தனது அபிப்பிராயமெனவும் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி சென்னி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் டொனால்ட் ரம்ஸ்வெல்ட்க்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரன்பாடு காரணமாக 4 வருட காலமாக வகித்து வந்த தனது பதவியிலிருந்து கொலின் பவர் ஓய்வுபெற்றார்.

No comments: