Sunday, November 23, 2008

270 படையினரை காணவில்லை என்ற செய்தியில் உண்மையில்லை - இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார


பரந்தனை நோக்கி எமது படையினர் முன்னேறிச் செல்கின்றனர். எமது 270 பேர் கொண்ட படையினர் காணாமல் போய் இருப்பதாகவும் அப்படை பிரிவைத் தேடிச் சென்ற மற்றொரு படை மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை. இது அப்பட்டமான பொய்யாகும் என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். பரந்தனை நோக்கி முன்னேறிச் சென்ற 270 பேரைக் கொண்ட படை அணி ஒன்றை காணவில்லை எனவும் அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் இணைய தளங்களில் செய்தி வெளியாகியிருந்தன. அத்துடன் அப்படை அணியைத் தேடிச் சென்ற மற்றொரு படையினர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் பல படை வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் அந்த இணையத்தள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இது குறித்து இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்காரவுடன் தொடர்பு கொண்டு கேட்ட போதே இச்செய்தியை மறுத்ததுடன் இது ஒரு அப்பட்டமான பொய் எனவும் அவர் கூறினார்.

No comments: