
வன்னி யுத்தத்தினால் பாதிக்கபட்டுள்ள வட பகுதி மக்களுக்கான தமிழக அரசினது நிவாரணப் பொருட்களை ஏற்றிய மூன்று கப்பல்கள் நாளை மறுதினம் சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்படுகின்றன. இந்தக் கப்பல்களில் 100 கெண்டய்னர்களில் நிவாரணப் பொருட்கள் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது.வியாழக்கிழமை சென்னைத் துறைமுகத்திலிருந்து புறப்படும் இந்த மூன்று கப்பல்களும் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்புத்துறை முகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.கொழும்பை வந்தடைந்தவுடன் இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகம் ஊடாக வடபகுதிக்கு உடனடியாக நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணி இடம்பெறுமென தமிழக அரசு அறிவித்துள்ளது,
No comments:
Post a Comment