Tuesday, November 11, 2008

படையினர் முல்லைத்தீவு குமுளமுனைக் கிராமத்தை அண்மித்துள்ளனர்


முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் படை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள 59 வது படைப்பிரிவினர் குமுளமுனைக் கிராமத்தின் ஒரு பகுதியை இன்று பிற்பகல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
படையினர் இவ் நகரை அண்மித்தது வன்னியை விடுவிக்கும் படை நடவடிக்கையின் இன்னொரு மைல்கல்லாகும்.
போரியல் யுக்திகளுக்கு மிக அத்தியாவசியமான குமுளமுனை பிரதேசத்தைக் கைப்பற்றுவது படையினரின் குறிக்கோளாகும். இதைத் தற்பொழுது அண்மித்தனால் புலிகளை மேலும் சிக்கலுக்குள் ஆக்கியுள்ளது.
தற்பொழுது படையினர் மூன்றுமுறிப்புக்கும் குமுளமுனைப் பாதைக்கும் இடைப்பட்ட பகுதியின் பாதுகாப்பை பலப்படுத்திவருகின்றனர்.
இக்கிராமம் புலிகளின் இதயமாகக் கருதும் முல்லைத்தீவுக்கு 13 கி.மீ தெற்காக அமைந்துள்ளது.

No comments: