Monday, November 17, 2008

எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலைநாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் புலம் பெயர் நாட்டில் உள்ள சிறீரெலோ உறுப்பினர்கள்


இன்று 16.11.2008 மாலை வவுனியாவில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த நிராயுத பாணிகளான எமது கட்சி உறுப்பினர்கள் இராசையா பீரதீப் (வசந்த்) வவுனியா மற்றும் வடிவேல் சிவகுமார் (பரா)வவுனியா ஆகியோர் மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதலை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் கொல்லப்பட்ட எமது தோழர்களுக்கு எமது கண்ணீரை காணிக்கை ஆக்குகின்றோம்.அத்துடன் இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அத்துடன் காயமடைந்துள்ள செல்லையா இளஞ்செலியன் (ரமணன்) மன்னார் மற்றும் செபமாலை றோச் சபிறியல் (நிர்மலன்) மன்னார் ஆகியோருக்கு எமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
புலத்தில் உள்ள சிறீரெலோ
உறுப்பினர்கள்

No comments: