Monday, November 17, 2008

எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது.


இன்று வவுனியாவில் எமது உறுப்பினர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று மாலை 6:45 மணியளவில் வவுனியவில் எமது கட்சி உறுப்பினர்கள் ஒரு புதிய காரியாலயம் அமைக்க துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிராயுத பாணிகளான இராசையா பீரதீப் (வசந்த்) வவுனியா மற்றும் வடிவேல் சிவகுமார் (பரா)வவுனியா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் காயம் அடைந்துள்ளனர். செல்லையா இளஞ்செலியன் (ரமணன்) மன்னார் மற்றும் செபமாலை றோச் சபிறியல் (நிர்மலன்) மன்னார் ஆகியோர் காயமடைந்துள்ளனர். மிலேச்சத்தனமான இத் துப்பாக்கித் தாக்குதலை சிறி-ரெலோ வன்மையாக கண்டிக்கிறது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட எமது கட்சியை சேர்ந்த வசந்த், பரா இருவரின் மறைவுக்கும் எமது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியை செலுத்துகின்றோம். அத்துடன் இவர்களின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

No comments: