Saturday, November 22, 2008

மக்களுக்கு விமோசனம் வழங்காத ராஜபக்ஷ அரசாங்கம் -ரணில்


பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் மக்களுக்கு விமோசனங்களை வழங்கவும் முடியாத நிலையில் ராஜபக்ஷ் அரசாங்கம் உள்ளது. இந்த அரசாங்கம் உடனடியாகப் பாராளுமன்றத் தேர்தலொன்றுக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.
இன்று காலை கோட்டேயிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாதளவுக்கு அதளபாதாளத்துக்குச் சென்றுள்ளது. நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து தாங்க முடியாத சுமைக்குள்ளாகியுள்ளனர். கடன்பளு அதிகரித்துள்ளது.
இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை 45 டொலர் வரை குறைந்துள்ளது. ஆனால் இந்த அரசாங்கமோ எரிபொருள் லீட்டருக்கு 10 செஸ் வரியை விதித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments: