Wednesday, November 26, 2008

பிரபாகரன் பணிப்பின் பேரில் அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம்

வன்னியில் பாரிய மோதல்கள் நிகழும் இந்த வேளையில் ‘தனது 54 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம்’ என புலிகளின் தலைவர் பிரபாகரன் பணித்தமைக்கு அமைய அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் ‘புலிகளின் குரல்’ வானொலியாலும் மற்றும் புலிசார் ஊடகங்களினால் பாரியளவில் முன்னெடுக்கப்படுவது வழமை. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என பிரபாகரன் பணித்துள்ளார். இன்று காலையில் ‘புலிகளின் குரல்’ வானொலியில் சில வாழ்த்துகள் பரிமாறப்பட்டன. பின்னர் நிறுத்தப்பட்டு, தொடர்ந்து பாடல்கள் மட்டுமே ஓலிபரப்பாகியது.

No comments: