
படையினரின் 55வது படையணியின் எஸ்எல்எஸ்ஆர் எனப்படும் சிறிலங்கா சிங்க றெஜிமென்ட்டை சேர்ந்த படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் கிளாலி பகுதியில் முன்னேற முயன்ற புலிகளின் அணியொன்று தமது ஆயுதங்களை போட்டு விட்டு ஏ- 9 பாதையின் தெற்கே தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவமானது இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து புலிகளால் கைவிடப்பட்ட ஆயுதங்களை படையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் இரண்டு ரி.56 ரக துப்பாக்கிகள், ஒரு ஆர் பி ஜி துப்பாக்கி ஒரு குண்டு துளைக்காத மேல்கவசம் என்பவற்றையும் மீட்டுள்ளனர். இந்த மோதல்களின் போது புலிகளின் தரப்பில் பலர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment