புலிகள் அமைப்பை அல்கைதா அமைப்பைவிட பயங்கரவாத அமைப்பாக வர்ணித்திருக்கும் இந்திய அரசாங்கம் அத்தகையதொரு பயங்கரவாதக் குழுவுடன் வைத்திருக்கும் எத்தகையதொரு தொடர்பும் சனநாயகத்திற்கு எதிரானதாகவே அமையும் என தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை எச்சரித்துள்ளது. எல்ரிரிஈ யினரது நடவடிக்கைகள் தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையிலான டில்லி நியாய சபையின் முன் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் எல் ரி ரி ஈ யினரது கொலைக் கலாசாரம் குறித்து தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் மறந்துவிடக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைக் கொலை செய்ததன் மூலம் மிகப் பயங்கரமான சர்வதேச குற்றத்தைப் புரிந்துள்ள அவ்வியக்கம் சனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்திற்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது. இந்தியாவிலும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் மிக வேகமாக வளர்ந்து வருவதாக அண்மையில் இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன. இந்நிலைமை இந்தியாவின் ஒருமைப்பாட்டின் அத்திவாரத்திற்கே அச்சுறுத்தலாக இருந்துவருவதாகவும் பல முன்னணி இந்திய ஆங்கில தினசரிகளின் ஆசிரியர் தலையங்கங்களில் தொடர்ந்தும்; எச்சரிக்கப்பட்டு வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.
சட்டரீதியற்ற நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி அமைக்கப்பட்ட இந்நியாய சபை அதற்கு முன்வைக்கப்பட்ட பல்வேறு காரணிகளைக் கருத்திற் கொண்டு எல்.ரி.ரி.ஈ அமைப்பை மேலும் இரண்டு வருடங்களுக்கு தடைசெய்தது. 1991ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி தமிழ் நாட்டில் வைத்து இந்தியாவின் முன்னால் பிரதம் ராஜிவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடHந்து 1992 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ அமைப்பு முதன் முறையாக தடைசெய்யப்பட்டதோடு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கொரு முறையும் அத்தடை நீடிக்கப்பட்டு வருகின்றது.
எல் ரி ரி ஈ யினர் தமக்குத் தேவையான பெற்றோல் டீசல் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கடத்திச் செல்வதற்கான தளமாக தமிழ் நாட்டையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலைமை குறித்து இலங்கை அதிகாரிகள் தெரிந்து வைத்திருப்பதோடு இந்திய அரசியல் தலைவர்களும் தமிழ் நாட்டின் பெரும்பான்மையான மக்களும் அறிந்துவைத்துள்ளனர் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல் ரி ரி ஈ அமைப்பிலிருந்து தமிழ் நாட்டுக்குள் தப்பிவந்திருக்கும் எல் ரி ரி ஈ உறுப்பினர்களது நடவடிக்கைகள் குறித்து அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் புலிகள் அமைப்பின் சட்டரீதியற்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்துவருகின்றது. எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Wednesday, November 26, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment