Sunday, November 16, 2008

கிளிநொச்சி கைப்பற்றப்படும் செய்தியை மாவீரர் தினத்தில் அறிவிக்க அரசு திட்டம்


தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமுள்ள கிளிநொச்சி நகரை புலிகளின் மாவீரர் தினமான நவம்பர் 27 ஆம் திகதி அறிவிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“லங்கா டிஸென்ட்’ இணையத்தளம் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள செய்தியொன்றில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிளிநொச்சி நகரை இன்னும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியும் என சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தம்மை இனங்காட்ட விரும்பாத சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் “லங்கா டிஸென்ட்’ டுக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பான கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளும் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன. தேசிய சுதந்திர முன்னணி கிளிநொச்சி நகரை கைப்பற்றிய படையினரைப் பாராட்டி சுவரொட்டிகளையும் தயாரித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒவ்வொரு வருடமும் மாவீரர் வாரத்தையொட்டி நவம்பர் 27 ஆம் திகதி விசேட உரை நிகழ்த்துவது வழக்கமாகும். கடந்த வருட மாவீரர் தின உரையின் பின்னர், 2008 ஆம் ஆண்டு புலிகளின் தலைவர் மாவீரர் தின உரையாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

No comments: