
இலங்கை அரசாங்கப் படைகள் நவீனரக இராணுவத் தளபாடங்களைப் பயன்படுத்துவதால் விடுதலைப் புலிகளால் கெரில்லாத் தாக்குதல்களை நடத்தமுடியாத நிலை தோன்றியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறினார். இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையிலிருந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் முல்லைத்தீவுக் காட்டுப் பகுதியில் கெரில்லாத் தாக்குதல்களை நடத்த முடிந்தது எனக் குறிப்பிட்டிருக்கும் கருணா, நவீனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் தற்காலத்தில் கெரில்லாத் தாக்கதல்களை முன்னெடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.
தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. இதனால், விடுதலைப் புலிகளால் காட்டுப் பகுதியில் கெரில்லா தாக்குதல்களை முன்னெடுக்கமுடியாது” என விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் கெரில்லாத் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தார்கள் என்பது உண்மை எனக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது அவர்களால் கெரில்லாத் தாக்குதல்களை நடத்த முடியாது எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பொதுமக்கள் தமது உணவுப் பொருள்களை வழங்கியிருந்தார்கள் எனவும், தற்பொழுது அதற்குச் சந்தர்ப்பம் இல்லையெனவும் கருணா கூறினார்.
தற்பொழுது நிலைமை மாறியுள்ளது. இதனால், விடுதலைப் புலிகளால் காட்டுப் பகுதியில் கெரில்லா தாக்குதல்களை முன்னெடுக்கமுடியாது” என விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் கெரில்லாத் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தார்கள் என்பது உண்மை எனக் குறிப்பிட்ட அவர், தற்பொழுது அவர்களால் கெரில்லாத் தாக்குதல்களை நடத்த முடியாது எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் பொதுமக்கள் தமது உணவுப் பொருள்களை வழங்கியிருந்தார்கள் எனவும், தற்பொழுது அதற்குச் சந்தர்ப்பம் இல்லையெனவும் கருணா கூறினார்.
No comments:
Post a Comment