
சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் 2ம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிராம அபிவிருத்தி சபைகளின் ஒத்துழைப்புடன் திருகோணமலைப் பிரதேசங்களிலிருந்து வறுமையால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டஆகக்குறைந்தது ஐந்து குடும்பங்களை சேர்ந்த எல்லா மாணவர்களுக்கும் பாடசாலை அப்பியாசக்கொப்பிகள் இலவசமாக வழங்கும் வைபவம் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்டக் காரியாலய சிறீ ரெலொ உறுப்பினர்களால் ஓழுங்கு செய்யப்பட்டது.
காலை 10.30 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் திரு. பரராஜசிங்கம் உதயராசா (உதயன்), சிறீ ரெலோவின் முக்கியஸ்தர்கள், சிறீ ரெலோவின் திருகோணமலை மாவட்டத் தலைவர்கள், திருகோணமலை மாவட்ட உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாபூஷணம் தில்லை முகிலன், கோயில் குருக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சமுகமளித்த அனைவரும் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இந்த தொண்டு நிகழ்வின் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட மக்களின் பிள்ளைகள் ஓவ்வொருவருக்கும் தலா ஆயிரத்திற்குக் குறையாத மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். விழாவிற்கு நூற்றுக்கணக்கான பொது மக்கள் வருகை தந்திருந்தனர். விழாவுக்கு உரிய நேரத்தில் வருகை தர முடியாதவர்களுக்கும் தாமதமாக கேள்விப்பட்டு வந்த மூவின மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
காலை 10.30 மணிக்கு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் திரு. பரராஜசிங்கம் உதயராசா (உதயன்), சிறீ ரெலோவின் முக்கியஸ்தர்கள், சிறீ ரெலோவின் திருகோணமலை மாவட்டத் தலைவர்கள், திருகோணமலை மாவட்ட உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாபூஷணம் தில்லை முகிலன், கோயில் குருக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சமுகமளித்த அனைவரும் சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இந்த தொண்டு நிகழ்வின் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட மக்களின் பிள்ளைகள் ஓவ்வொருவருக்கும் தலா ஆயிரத்திற்குக் குறையாத மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தனர். விழாவிற்கு நூற்றுக்கணக்கான பொது மக்கள் வருகை தந்திருந்தனர். விழாவுக்கு உரிய நேரத்தில் வருகை தர முடியாதவர்களுக்கும் தாமதமாக கேள்விப்பட்டு வந்த மூவின மக்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment