Saturday, October 25, 2008

புத்தளம் பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் பற்றிய கணிப்பீடு நாளை


வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருப்போர் பற்றிய கணக்கெடுப்பொன்றினை மேற்கொள்ளத் தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு நளை காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை இடம்பெறும். சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவனங்களுடன் வருகை தந்து தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

No comments: