
சோவியத் யூனியனிடமிருந்துகொள்வனவு செய்யப்பட்ட இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்தித் தருமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
“சோவியத் யூனியனாக இருந்தபோது கொள்வனவு செய்யப்பட்ட இராணுவத் தளபாடங்கள் பழுதடைந்துள்ளன. சோவியத் நாடுகள் தனியாகப் பிரிந்திருப்பதால் இராணுவத் தளபாடங்களைத் திருத்திக் கொள்வதில் சிக்கல் தோன்றியுள்ளன. எனினும், இந்த இராணுவத் தளபாடங்களை ரஷ்யா திருத்திக் கொடுக்கும்” என அவர் கூறினார்.
இராணுவ புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது இதுவரை ரஷ்யாவுடன் சுமுகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட கோதபாய, “பயங்கரவாத அமைப்புக்கள் மற்றும் இராணுவ விடயங்களை ரஷ்யாவுடன் பகிர்ந்து கொள்வதற்கான அவசியம் பற்றிய விளிப்புணர்வொன்றை ஏற்படுத்தவேண்டும்” என்று கோதபாய குறிப்பிட்டார்.
இதேவேளை, தற்பொழுது வன்னிப் பகுதியில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அரசாங்கப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment