Monday, October 20, 2008

புதிய அமைப்பு தொடங்குகிறார் தயாநிதி மாறன்


முரசொலி மாறன் பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று துவக்குகிறார்.
மு.க.அழகிரிக்கும், மாறன் சகோதரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேர்ந்தது.
அதனைத் தொடர்ந்து இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட விரிசலை சரிசெய்ய மாறன் சகோதரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், சமீப காலமாக திமுக அரசுக்கு எதிராக செய்திகளை சன் டி.வி.அதிக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருவதுடன்,எதிர்கட்சியான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அத்துடன் விஜயகாந்த், சரத்குமார், வைகோ, ராமதாஸ், இடதுசாரி கட்சி தலைவர்களின் செய்திகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது
இந்நிலையில், தனது தந்தை முரசொலி மாறன் நினைவாக ‘முரசொலி மாறன் பேரவை’ என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை தயாநிதி மாறன் இன்று மாலை துவக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மாறன் அறக்கட்டளை, சன் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளைகளை நிறுவி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் மாறன் சகோதரர்கள் அரசியல் ரீதியாக களத்தில் இறங்கும் வகையில் முரசொலிமாறன் என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்றை துவக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்னோடியாகவே தயாநிதி மாறன் இதனை துவக்க உள்ளதாக கூறப்படுகிறது.

No comments: