Sunday, August 10, 2008
புலம்பெயர்வாழ் தமிழ் மக்களின் கவனத்திற்கு!
வன்னிபோர் முனையில் படுதோல்வியை சந்தித்துவரும் புலிகள் தமது ஆதிக்கத்தில் இருந்த நில பகுதிகளை சிங்கள இராணுவத்திடம் இழந்து தப்பியோடிவருகின்றனர். இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்மக்களை ஏமாற்றி நிதி வசூலிக்கும் கைங்கரியத்தை புலிகளின் வெளிநாட்டு பினாமிகள் இன்னும் கைவிடவில்லை. தமிழீழம் கேட்டு போராடிய புலிகள் புறமுதுகு காட்டி தப்பியோடி வருகின்றபோதும், உண்டியல் புலிகள் தமது வருவாயை பெருக்கி கொள்வதில் துடிப்பு.இறுதி கட்டபோர், மண்பு மீட்பு போர் என்று பல்வேறு பெயர்களில் நிதி வசூலித்த வெளிநாட்டு வாழ் புலி பினாமிகள் அவ் நிதிகளில் வீடுகள், வாகனங்கள, வியாபாரங்கள்; என்று உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வருபவர்களுக்கு உண்டியல் நிதி எங்கே வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற ஏக்கத்தில் புலி இயக்கம் ஊசலாடி கொண்டிருக்கையிலாவது இயன்றளவு நிதியை வசூலித்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்து வருகின்றனர்.போலி பிராச்சாரங்களையும், பசப்பு வார்;த்தைகளையும் கூறி நிதி வசூலிப்பதில் தீவிரமாய் உள்ளனர். அன்பார்ந்த மக்களே நீங்கள் வழங்கும் இவ் நிதிகள் ஒன்றும் சிங்கள இராணுவத்தின் முன்னேற்றத்தையோ அல்லது பறிபோய் கொண்டுள்ள வன்னிமண்ணையோ காப்பாற்ற உதவாது, மாறாக புலி பினாமிகளின் உல்லாச வாழ்வுக்கே உதவும் என்பதை புரிந்து கொண்டு செயலாற்றுங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment