Thursday, April 2, 2009

‘வார உரைகல்’ பத்திரிகை ஆசிரியர்மீது தாக்குதல் : அலுவலகமும் சேதம்


மட்டக்களப்பு, காத்தான்குடியிலிருந்து வெளிவரும் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ரஹ்மத்துல்லா (54) மீது தாக்குதல் நடத்திய இனந்தெரியாத குழுவொன்று அவரது அலுவலகத்துக்கும் விட்டுக்கும் தீ வைத்துள்ளன. இச்சம்பவம் நேற்றிரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காத்தாதன்குடி ஏ.எல்.எஸ். வீதியிலுள்ள தனது அலுவலகத்தில் கடமையிலீடுபட்டிருந்தபோது திடீரென உள்நுழைந்த இனந்தெரியாத குழுவினர் அவர் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டனர். அதன் பின்னர் காரியாலயத்திலிருந்த பொருட்களைச் சேதப்படுத்தியதுடன் தீயும் வைத்துள்ளனர். அத்துடன் அவரது வீட்டுக்கும் சென்று தீ வைத்துள்ளனர்.
படுகாயமடைந்த நிலையில் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் சத்திர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

No comments: