Thursday, April 2, 2009

புதுக்குடியிருப்பு பச்சப்புல்மூடை படையினரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள்


புதுக்குடியிருப்புக்கு கிழக்காக தாக்குதலில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் எல்ரிரிஈ பயங்கரவாதிகளுக்கு கடும் சேதங்களை ஏற்படுத்தி நேற்று பிற்பகல் பச்சப்புல்மூடையை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டுவந்துள்ளதாக பாதுகாப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத எல்ரிரியினர் இறந்த தமது சகாக்களின் உடல்களையும் விட்டு தப்பிச்செலவதாக களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து இப்பகுதியில் படையினர் நடத்திய தேடுதலின் போது 19 பயங்கரவாதிகளின் உடல்கள் மற்றும் படைப் பொருட்களும் கைபற்றபட்டுள்ளன.
19 ரி௫6 ரகதுப்பாக்கிகள்,இரண்டு பிரதான தொடர்புமைய சாதனங்கள், என்பன கைபற்றப்பட்ட பொருட்களுள் அடங்குவதாக படையினரின் அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments: