Friday, April 3, 2009

வவுனியாவில் கடத்தல் நாடகத்தில் ஈடுபட்ட புளொட் உறுப்பினர்கள் கைது


வவுனியாவில் எட்டு பேரை கடத்திச் சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்திய புளொட் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். குறித்த எட்டு பேரையும் வவுனியாவிலுள்ள புளொட் காரியாலயத்தில் வைத்து சித்திரவதைப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைக்ரோ துப்பாக்கிகளைப் பயன்படுத்தி குறித்த நபர்களை புளொட் உறுப்பினர்கள் கடத்தியுள்ளனர்.
இவ்வாறு கடத்தப்பட்ட நபர்களிடமிருந்து பெருந்தொகைப் பணத்தைப் கப்பமாக பெற்றுக்கொள்ள புளொட் உறுப்பினர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டு சித்திரவதைப்படுத்தப்பட்ட அனைவரும் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதென வவுனியா நிருபர் தெரிவித்தார்.

No comments: